Title of the document

செல்வமகள்' சேமிப்பு திட்டம்.. ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்.. இதோ முழு விவரம்..!!!


இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது.

இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒவ்வொரு திட்டங்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் கால அளவும் உள்ளது.

அதன்படி பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் 'செல்வமகள் சேமிப்பு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதிர்வு தொகை யில் 50% வைப்பு தொகையை குழந்தைகளின் மேற்படிப்புக்காக பெற்றுக்கொள்ளலாம் அல்லது 20 வயது நிறைவடையும் போது கூட பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு. அதன்படி மாதம் ஒருவர் ரூ.1000 சேமித்து வந்தால் முதிர்வு தொகை ரூ.5.09 லட்சம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post