Title of the document
ArasuVelai - அரசுவேலை எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலை !

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தற்போது
  1. அலுவக உதவியாளர், 
  2. ஈப்பு ஓட்டுநர் மற்றும் 
  3. இரவுக் காவலர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தம் 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  
 வேலைவாய்ப்பற்ற இளைனர்களுக்கு பயன்படும் வகையில் மத்திய, மாநில  அரசு, ரயில்வே வேலை வாய்ப்பு செய்திகளை உடனடியாக அறிந்துகொள்ள விரைவில் ArasuVelai.Net என்ற புதிய இணையதளம், தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ...
ArasuVelai Whatsapp Group link - Click Here ( Update Soon)
 விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை 09.09.2020 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் கரூர் மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

கரூர்  ArasuVelai வேலைவாய்ப்பு 2020 (Karur district jobs 2020) அறிவிப்பு

நிறுவனம்  :  கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலைவாய்ப்பு வகை  :  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்    : அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர்.
காலியிடங்கள் :    09
பணியிடம்  :  கரூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி   : 09.09.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் :   karur.nic.inc


பணிகள்                              காலியிடங்கள்                   சம்பளம் 

அலுவக உதவியாளர்     05                               ரூ.15,700/- & ரூ.50,000/-
ஈப்பு ஓட்டுநர்                      02                                 ரூ.19,500/- & ரூ.62,000/-
இரவுக் காவலர்                 02                                ரூ.15,700/- & ரூ.50,000/-

மொத்த காலியிடங்கள்    09

அலுவக உதவியாளர்:

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

ஈப்பு ஓட்டுநர் :

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இரவுக் காவலர் பணிக்கு:

எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

ArasuVelai க்கான வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:
அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமரிப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  சான்றிதழ்களின் நகல்களுடன் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அவர்களுக்கு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 (karur TNRD Recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
karur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். அதில் வேலைவாய்ப்பு 2020 ஆண்டிற்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.. அதாவது  NOTICES என்பதை Click செய்து  பிறகு Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு Recruitment in Panchayat Development Department – 20.08.2020 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பின் விண்ணப்ப படிவத்தை Download செய்து ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.

ArasuVelai - அரசுவேலை கிடைக்க வாழ்த்துகள்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post