Title of the document

Screenshot_2020-06-01-20-49-51-80


1. ஆண்டன் வான் லூவன் ஹுக் என்ற நுண்ணுயிரியலாளர் முதன் முதலில் தன்னுடைய நுண்ணோக்கியை வடிவமைத்தார் .

2. வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ.வே வீராய்டு என அழைக்கப்படுகிறது . இவைகள் தாவர செல்களில் காணப்பட்டு அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன .

3. கிரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் நரம்பு மண்டலத்தை சிதைக்கும் ஒரு நோய் ஆகும் . இந்த நோயின் விளைவாக செரிப்ரல் கார்டெக்ஸ்
( மூளையின் மேற்பட்டை ) என்ற பகுதி பாதிக்கப்படுகிறது . முற்றிக்கொண்டே செல்லுகிற மூளைக்கோளாறு நோயான நினைவை இழுத்தல் , நடத்தையில் மாற்றங்கள் , குறைவுபட்ட ஒருங்கிணைப்பு மற்றும் பார்வையில் இடையூறு ஏற்படல் போன்ற பிரச்சனைகள் இதனால் ஏற்படுகின்றன

4. உலக சுகாதார தினம் - ஏப்ரல் 7

5. உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25

6. உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1

7 . உலக காச நோய் எதிர்ப்பு தினம் - மார்ச் 24

8. இராபர்ட் காச் ( பாக்டீரியாவியலின் தந்தை ) - இவர் முதன் முதலில் நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார் . 1876 ஆம் ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால் உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார் . இந்தநோயால் பாதிக்கப்பட்ட செம்மறி ஆடுகளின் இரத்த நாளங்களில் கோல் வடிவ பாக்டிரியாக்கள் காணப்பட்டதைக் கண்டறிந்தார் . செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேய்கிறபோது இவ்வகைப் பாக்டீரியங்கள் அவைகளின் உடலுக்குள் செல்கின்றன என்ற முடிவுக்கு அவர் வந்தார் .

9. காசநோயைப் பரப்பும் மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியாவானது ராபர்ட் கோச் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது

10. மாண்டாக்ஸ் சோதனையானது காசநோயைக் கண்டறிவதற்கான ஒரு குறிப்பிட்ட டியூபர்குளின் தோல் சோதனையாகும் .

11. தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டமானது 1962 ம் ஆண்டு துவங்கப்பட்டது .

12. காலரா நோய் விஃப்ரியோ காலரே என்ற உயிரியால் ஏற்படுகிறது என்பதை முதன் முதலில் வெளியிட்டவர் ராபர்ட் காச் ஆவார் . இந்த பாக்டீரியத்தால் உருவாக்கப்பட்ட காலோரஜன் என்ற தீங்கிழைக்கும் நச்சுப் பொருள் இந்நோயை ஏற்படுத்துகிறது .

13. போலியோ வைரஸானது என்டிரோ வைரஸ் எனவும் அழைக்கப்படுகிறது . இது உணவுக்குழாய் சம்பத்தப்பட்ட இடங்களில் ஏற்படும் நோய்த்தொற்றாகும் . 3 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை இது அதிகமாகப் பாதிக்கிறது .

14. இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வானது தொடங்கப்பட்டது .

15. 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒருவரும் இந்தியாவில் இல்லை என அறவிக்கப்பட்டுள்ளது .
• மூன்று வருடங்களில் ஒரு நாட்டிலுள்ள எந்த ஒரு நபரும் போலியோவால் பாதிக்கப்படவில்லையெனில் உலக சுகாதார நிறுவனம் போலியோ இல்லாத நாடு என அந்நாட்டை அறிவிக்கும் . எனவே , இந்தியாவானது 2014 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி அந்த சிறந்த நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது .

16. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது . இந்நோய் பல மில்லியன் மக்களைத் தாக்கியது.எனவே ஜூன் 2009 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பன்றிக்காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை நோய் என அறிவித்தது .
• 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 31,000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு அதில் 1900 பேர் இறந்துபோனதாக தகவல்கள் உள்ளன .
• 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாலத்தீவில் இந்நோய் சிறிய அளவில் பரவ ஆரம்பித்தது . இந்த பன்றிக்காய்ச்சல் நோயானது உலகில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது . உலக சுகாதார நிறுவனமானது இந்த நோய்க்கு பெரும் கொள்ளை நோயின் அளவில் 5 ஆம் அளவு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது . இந்த அளவானது மனிதர்களிடமிருந்து பிற மனிதனுக்கு நேரடியாக பன்றிக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதைக் காட்டுகின்றது .

17. பறவை இன்ஃபுளுயன்சா வைரஸ் ஏ
( எச் 5 என் 1 ) 1996 ஆம் ஆண்டு தோன்றியது . இந்த வைரஸால் முதன் முதலில் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் நோய் தோன்றியதாகக் கண்டறியப்பட்டது . இந்த H , N , வைரஸ் அதிக அளவில் வளர்ப்புப் பறவைகளைத் தாக்கியது .

18. அமெரிக்காவிலுள்ள தேசிய சுகாதார நிறுவனத்தல் பணியாற்றும் ராபர்ட் காலோ என்பவரும் பாரிஸ் நாட்டிலுள்ள பாய்ஸ்டர் நிறுவனத்திலுள்ள லூக் மாண்டக்னெர் என்பவரும் 1983 ஆம் ஆண்டு எய்ட்ஸ் ஏற்படுத்தும் நோய்த் தடுப்பாற்றலைக் குறைக்கும் வைரஸ்களை ( எச்.ஐ.வி ) பிரித்தெடுத்தனர் .

19. தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார் . உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி , மனித குலத்தினிடையே இருந்த பெரியம்மையானது ஜென்னரின் தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது .

20. உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி , நோய் எதிர்ப்பு திறனூட்டலால் ஒவ்வொரு வருடமும் 2 முதல் 3 மில்லியன் ( 20-30 இலட்சம் ) மக்கள் இறப்பிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.

🥦🧚🏼‍♂️Chemistry Important Notes!

🧚🏼‍♂️Click here to view

🥦🧚🏼‍♂️Group 1&2&4 - Important Notes!

🧚🏼‍♂️Click here to view

🥦🧚🏼‍♂️டெல்லி சுல்தான்கள் பற்றிய தகவல்கள்!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post