Title of the document
விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரி யர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டத் தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பணி யாற்றிவரும் ஆசிரியை , ஆசி ரியர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு சாரண சாரணிய இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட் டது .

இதன் ஒருபகுதியாக ஆசிரியை , ஆசிரியர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு அவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் ஞானகவுரி , மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் கபசுர குடி நீர் வழங்கினர் . மாவட்டத்திலுள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலுள்ள ஆசி ரியை , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கபசுரகுடி வழங் கப்பட்டது .

இதற்கான ஏற்பாடு களை தூத்துக்குடிமாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கிருபை வேல் முருகன் தலைமை யில் , மாவட்ட செயலாளர் எட்வர்ட்ஜான்சன்பால் , இணைச்செயலாளர் சகா யமேரி , ஆணையர் சண்மு கம் , அமைப்பு ஆணையர் அல்பர்ட் தினேஷ் சாமு வேல் , பயிற்சி ஆணையர் கள் சரவணன் , ஜெயா சண்முகம் மற்றும் சாரண , சாரணிய பொறுப்பாசிரி யர்கள் செய்திருந்தனர் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post