Title of the document
இன்றைய செய்திகள் 30.03.2021(செவ்வாய்க்கிழமை)
🌹இன்று கை கொடுக்க 
யாரும் இல்லை என்று வருந்தக்கூடாது.
ஏனெனில் 
நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும் நீங்கள் முயற்சி செய்தால் என்பதை மறந்து விடக்கூடாது.!
🌹🌹உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் 
உதடு சொல்லத் துடிக்கும் 
உள்ளம் சொல்லாமல் துடிக்கும்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா தொற்று - பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
🎀🎀பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை: கர்நாடக அரசு
🎀🎀92 தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர் நிலை 1 பணியிடங்களை மூன்றாண்டுகளுக்கு  தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு
🎀🎀193 வேளாண்மை தொழிற்கல்வி தற்காலிக  ஆசிரியர்கள் பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு
🎀🎀வங்க கடலிலும், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: சென்னை வானிலை மையம்
🎀🎀மே 1 வரை ‌அஞ்சல் வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாக அனுப்பலாம்
🎀🎀 தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு.
🎀🎀PAN(பான் நம்பரை) - AADHAAR Card (ஆதார் எண்ணுடன்) இணைக்கப்பட்டுள்ளதா- மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி.
🎀🎀சமையலர், உதவியாளருக்கு தேர்தல் பணி|( தேர்தல் அலுவலர் கிரேடு 2 ) மிகுந்த சிரமங்களையும், குழப்பங்களுக்கும், தடுமாற்றத்தை தான் வழிவகுக்கும் - சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு. 
🎀🎀தேர்தல் நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், -அரசியல் கட்சியினர் சார்பில் ‘ஸ்பான்சர்’ செய்யப்படும் உணவை சாப்பிட தடை:தேர்தல் கமிஷன்.
🎀🎀உணவு, கழிப்பிடம், போக்குவரத்து- தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு -இம்முறையேனும் தமிழக தேர்தல் ஆணையம் இந்தச் பிரச்னையை சரிசெய்யுமா? 
என எதிர்பார்ப்பு.
🎀🎀பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
🎀🎀சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து - 30க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், துறை தொடர்பான ஆவணங்கள் எரிந்து நாசம் என தகவல்.                                                        🎀🎀தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு ஏப் 7 விடுப்பு தர ஜாக்டோ - ஜியோ கோரிக்கை
🎀🎀தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
🎀🎀NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வை நாடு முழுவதும் நடத்த கோரிக்கை. மத்திய அரசு டெல்லியில் டெல்லியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என  அறிவித்துள்ளது.
🎀🎀தமிழகத்தில்  தேர்தலுக்காக 44,578 (50%) வாக்குச்சாவடிகளில் CCTV  கேமரா பொருத்தப்படும் நடவடிக்கை தொடங்கியது. மீதமுள்ள 50% வாக்குசாவடிகளில் வீடியோ காமிராவில் தேர்தல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.
🎀🎀பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது 
🎀🎀தென் மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.                                                                   🎀🎀அடி மனதில் இருந்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்: ஆ.ராசா
எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டார் என்ற செய்தியை நாளிதழ் வாயிலாக படித்து மிகுந்த மன வேதனை அடைகிறேன். இடப் பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக, அடி மனதில் இருந்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் . இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டு இருப்பதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது , எனது பேச்சு இரண்டு தனி நபர்கள் பற்றிய தனிநபர் விமர்சனம் அல்ல. பொது வாழ்க்கையில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடு தான். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
🎀🎀மத்திய அரசின் வீடு கட்ட மானியத்தொகை – மார்ச் 31 கடைசி தேதி
🎀🎀மத்திய அரசு அதிமுகவுக்கு ஆதரவாகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்
மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், எடப்பாடி பழனிசாமி அரசு சுதந்திரமான அரசாக இல்லாமல் அடிமை அரசாக உள்ளது. இந்த அரசின் கட்டுப்பாடு நரேந்திரமோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
🎀🎀மக்களை கண்டுக்கொள்ளாத அதிமுக அரசுக்கு பாடம் புகுட்டுங்கள் என மேலூர் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக கூட்டணி 234 தொகுதியிலும் வெல்லும் எனவும்  கூறியுள்ளார்.
🎀🎀வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு.
₹33 லட்சம் அபராதமும், சொத்துக்களை அரசுடமை ஆக்கவும் நீதிபதி தீர்ப்பு
🎀🎀மோடியின் வித்தை  தமிழகத்தில் செல்லுபடி ஆகாது
-திருச்சி சிவா
🎀🎀சிறுபான்மையினர் பாதுகாவலர் போல் பழனிசாமி நாடகமாடுகிறார்: 
-மு.க. ஸ்டாலின்
🎀🎀பகல் கொள்ளையர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் 
திருக்குவளையில் சி.பி.எம். பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  பேச்சு
🎀🎀அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டி இடுவதால் இரட்டை இலை இருக்காது தாமரை தான் இருக்கும் 
காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பேச்சு.
🎀🎀வாணியம்பாடி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய சாலையான சி.எல் ரோடு  வழியாக வீதி வீதியாக நடந்து சென்று திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நயிம் அகமது ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஸ்டாலின் திடீர் வருகையால் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
🎀🎀இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நடராஜன் வீசிய யார்க்கர் பந்துகள் முக்கிய காரணம்: மைக்கேல் வாகன்.
👉இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்படன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பான யார்க்கர் பந்துகளை நடராஜன் வீசியுள்ளார் என குறிப்பிட்டார். இறுதி ஓவரில் நெருக்கடியான நேரத்தில் யார்க்கர் வீசி 6 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்துள்ளார் என கூறினார். இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நடராஜன் வீசிய யார்க்கர் பந்துகள் முக்கிய காரணம் என கூறினார்.
🎀🎀அமைச்சர் பதவியை பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு கே.சி.வீரமணி எதுவும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. 
அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடத்தி மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது. 
தனது கல்லூரிக்காக மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விதிமீறலை தைரியமாக செய்தவர் தான் அமைச்சர் வீரமணி. 
கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார் அமைச்சர் கே.சி.வீரமணி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
கொள்ளை அடித்த கே.சி.வீரமணியை தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.                 🎀🎀பாஜக - அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது : 
மு.க.ஸ்டாலின் ட்வீட்
🎀🎀டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்
🎀🎀ஆளும் கட்சியினர் தொண்டர்களை நம்பி இல்லை;ரூபாய் நோட்டுகளை நம்பியே உள்ளனர் 
டிடிவி தினகரன்
🎀🎀இனி என்னுடைய அரசியல் பயணம்
ஆன்மீக அரசியல் பயணம் 
டி ராஜேந்தர்
🎀🎀தமிழக சட்டமன்ற தேர்தலில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும்.
ஏப்ரல் 6 -ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு தயார் 
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி.
🎀🎀நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார் பழனிசாமி
ப.சிதம்பரம்
🎀🎀வேலுமணி, தங்கமணி, வீரமணி.. 
மூன்று பேர் பெயரிலுமே money இருப்பதால்,  கொள்ளையடிப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றனர் 
- மு.க.ஸ்டாலின்
🎀🎀தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் விவசாயி அல்ல விஷவாயு
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
🎀🎀நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை அமல்படுத்த அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்தான் துணை நின்றன
குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது 
சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் குரல் கொடுக்கும் 
- ஸ்டாலின்
🎀🎀திருச்சி தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
திருச்சி ஆட்சியர்  திவ்யதர்ஷினி
🎀🎀அதிமுக ஆட்சியில் சென்னையில் நல்ல சாலை வசதி, மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
-எடப்பாடி பழனிச்சாமி
🎀🎀பிரதமர் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று ஒருநாள் 144 தடை உத்தரவு
🎀🎀தன் தாயை தவறாக ராசா பேசிட்டார்னு முதல்வர் அழுகிறார். உங்களை ஒருத்தவங்க முதல்வராக்கிட்டு, சிறைக்கு போனாங்க. ஞாபகம் இருக்கா ? இன்னிக்கு சசிகலா யார்னு கேள்வி கேட்குறீங்க. ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துட்டு, இப்ப பெண்களுக்காக அழுவது போல பேசுறீங்க
-டிடிவி தினகரன்
🎀🎀முதல்வர் கண்ணீர் வடித்தார், ஆ.ராசா மன்னிப்பு கேட்டு விட்டார்; 10 ஆண்டுகள் தமிழக மக்களின் உரிமைகளை பறித்துக் கொண்டதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்பாரா? 
- மதுரையில் சி.பி.எம்.  எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு
🎀🎀அமைச்சர் எம்.சி சம்பத் உறவினரின் வீட்டிலிருந்து ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல்.
🎀🎀குஷ்புவைத் தேர்ந்தெடுத்தால் டெல்லி வரை சென்று உரிமையுடன் பேசுவார் - முதல்வர் பழனிசாமி பேச்சு
🎀🎀மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 
வீட்டில்  ஜேசிபி  டிரைவராக  வேலை பார்க்கும்  அழகர்சாமியிடம்  இருந்து  
ஒரு  கோடி  பறிமுதல்  செய்தது  வருமானவரித்துறை
🎀🎀வேளாண் சட்ட நகலை எரித்து தில்லியில் விவசாயிகள் ஹோலி கொண்டாட்டம்.
🎀🎀தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்கு இரும்பு கரம் கொண்டு பாதுகாக்கப்டும், காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்
- வேலூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு
🎀🎀ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் உழைத்து சம்பாதிக்கும் ரூ.10 மேலானது 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேச்சு
🎀🎀மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று. மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.
🎀🎀சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில்
இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்;
தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.
🎀🎀முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் குற்றச்சாட்டு.
🎀🎀அதிமுக, திமுக வெல்வது வெறும் நிகழ்வு! நாம் தமிழர் வென்றால் அது புரட்சி; நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை.
🎀🎀மக்களால்தான் மக்கள் நீதி மய்யம் என்ற 3 வயது குழந்தை எழுந்து நடந்து ஓடுகிறது; தேர்தல் பரப்புரையில் மநீம தலைவர் கமல்ஹாசன் உரை.
🎀🎀புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
🎀🎀மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில்
சுட்டுக்கொலை; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post