பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம்
பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் ௧ல் சேரும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, புதிய பாடப்பிரிவு கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதனடிப்படையில், மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர் கல்வி குறித்த அச்சத்தை போக்கும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையிலும், தற்போது நடைமுறையில் உள்ள நான்கு பாட பிரிவுகளுடன், புதிதாக சில பாடப்பிரிவுகள், பிளஸ் ௧ வகுப்புக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்த புதிய பாட பிரிவுகள், நடப்பு, 2020 - 21ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன. அதனால், பிளஸ் ௧ வகுப்புக்கு, இந்த புதிய பாட பிரிவுகளின்படியே, விரைவில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. பாடப்பிரிவுகள் விபரம்: அறிவியல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் வேதியியல், உயிரியல் மற்றும் மனை அறிவியல் இந்த நான்கு பாட பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.கலை பிரிவு வரலாறு, புவியியல், பொருளியல் வணிகவியல், கணக்கு பதிவியல் மற்றும் பொருளியல் வணிகவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அல்லது கணக்கு பதிவியல் வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்; வளர் தமிழ், வரலாறு மற்றும் பொருளியல் தொழிற்கல்வி இதேபோல், தொழிற்கல்வியிலும், மூன்று பாட பிரிவுகள் இருக்கும்.
இந்த பாட பிரிவின்படி, மாணவர்கள், மொழிப் பாடங்களுடன், மூன்று முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்கள், எந்த பாட பிரிவை தேர்வு செய்தாலும், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.புதிய முறையில் விருப்பம் இல்லாத மாணவர்கள், பழைய பாடத் தொகுப்பையும் தேர்வு செய்யலாம்.
Post a Comment