
நடப்பு ஆண்டு குரூப் 1 உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித் துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-ஆக நீட்டிக்கப்பட்டுள் ளது.
இதையடுத்து அடுத்த ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்சி பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு கள் நடைபெற வாய்ப்பில்லை என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இது தேர்வர்கள் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வாணைய செயலர் நந்தகுமாரிடம் கேட்ட போது, ‘‘அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள் ளதால், நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல்.
எவ்வித பாதிப்பும் ஏற்படாது ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான கால அட்டவணைப்படி அரசு் பணிக் கான குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும்.
அடுத்த ஆண்டு தமிழக அரசு வழங் கும் பணியிடங்களின் எண்ணிக் கையைப் பொறுத்து காலியிடங் களின் எண்ணிக்கை, தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங் கள் வெளியிடப்படும். எனவே, நடப்பு ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.
Post a Comment