Title of the document
ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் அக்., 16ல், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கவுள்ளதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலையில் அக்., 16 ல் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளை அக்., 5 க்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post