Title of the document

G.O 15 | பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.10,000 ஆக உயர்வு அரசாணை !



பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம்  ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆகஉயர்வு :

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் கல்விசார் ( உடற்கல்வி , ஓவியம் , இசை மற்றும் வாழ்க்கைக் கல்வி ) இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேரப் பயிற்றுநர்கள் , அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளைச் சிறக்க செய்து வருவதினால் , அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இவர்களது மாத ஊதியத்தினை ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது . 

நிபந்தனைகள் :

 i . தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்றுநர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மறுஒதுக்கீடு செய்து , இனிவரும் காலங்களில் அவர்கள் வாரத்திற்கு மூன்று முழு நாட்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் . 

ii . பகுதி நேரப் பயிற்றுநர்கள் பணி புரியும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழங்கும் கால அட்டவணையின்படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்விசார் இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்க வேண்டும் . 

iii. இவர்களுக்கான வருகைப் பதிவேடு , சார்ந்த தலைமையாசிரியரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் . 

 iv . இவர்களது ஊதியம் , வருகைப் பதிவேட்டின்படி தலைமையாசிரியர் மூலமாகவே விடுவிக்கப்பட வேண்டும் . 2 . மேலே குறிப்பிட்டுள்ளவாறு , பகுதி நேர பயிற்றுநர்களுக்கான ஊதியத்தினை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் செலவினத்தில் , ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஒப்புதல் குழு ( Project Approval Board ) ஒப்புதல் அளிக்கும் தொகைக்கு கூடுதலாக ஏற்படும் செலவினத்தை மட்டும் மாநில அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளலாம் எனவும் அரசு ஆணையிடுகிறது .

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post