Title of the document

9, 11ம் வகுப்புக்கு 08.02.2021 முதல் பள்ளிகள் திறக்கப்படும் - முதலமைச்சர் அறிக்கை : 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K பழனிசாமி அவர்களின் அறிக்கை :

31.1.2021 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . 


மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி , முனைப்புடன் செயல்பட்டு வருகிறது . தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் , நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக , ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டுள்ளது . 
 
கடந்த நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது . சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 க்கு மேல் இருந்து தற்போது 4,629 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது . தமிழ்நாட்டில் 31.1.2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது . பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும் , 29.1.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் , மருத்துவ நிபுணர்கள் மற்றும் 2 2 ) 12 பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் , மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும் , தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் , கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , 31.1.2021 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன் , 28.2.2021 நள்ளிரவு மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது . 
 
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் , நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும் , தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர ( Except Containment Zones ) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது : 
 
9, 11ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி :
  • 1 ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , கலை , அறிவியில் , தொழில்நுட்ப , பொறியியல் , வேளாண்மை , மீன்வளம் , கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை , முதுநிலை படிப்புகளுக்கான ( பட்டயப் படிப்பு உட்பட ) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது . அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . 
  • 2 ) பள்ளிகள் ( 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் மட்டும் ) 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க 3 அனுமதிக்கப்படுகிறது . அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . 
  • 3 ) இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள் , நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன . 
  • 4 ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன . 
  • 5 ) மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் ( multiplex ) , வணிக வளாகங்களில் ( ( shopping malls ) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 01.02.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன . 
  • 6 ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , கண்காட்சிக் கூடங்கள் ( Exhibition Halls ) செயல்பட அனுமதிக்கப்படுகின்றன . 
  • 7 ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் ( 50 % capacity ) அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள் , சமுதாய , அரசியல் , பொழுதுபோக்கு , விளையாட்டு , கலாச்சார நிகழ்வுகள் , கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் , 01.02.2021 முதல் , நடத்த அனுமதிக்கப் படுகின்றன . திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் ( 50 % capacity நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நடைமுறை தொடரும் .
  •  8 ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , விளையாட்டு நிகழ்ச்சிகளில் ( கிரிக்கெட் உட்பட ) , அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் ( 50 % capacity ) மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது . 
  • 9 ) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது . 
  • 10 ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது . ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் , மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்..
 
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர , சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால் , இதற்கான தடை தொடரும் . - தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zones ) தற்போதுள்ள நடைமுறைகளின்படி , எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் . தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும் , அதனை முழுமையாக தடுக்கவும் , நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் . குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில் , மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து , விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன . 
 
இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் . பொதுமக்கள் வெளியே செல்லும்போதும் , பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் . பொதுமக்கள் வீட்டிலும் , பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும் , சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும் , அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும் , அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் , இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும் . எனவே , பொது மக்களின் நலன் கருதி , உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ,.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post