Title of the document


 நமது தமிழக அரசு பல்வேறு கிராம வளர்ச்சி நிலையை மேம்படுத்துவது முறையாக பல்வேறு நிர்வாக பணிகளை  தேர்ந்தெடுத்து நமது அரசு செயல்படுத்தப்படுகிறது, இது தற்போது கிராமங்களுக்கு நேரடி தொடர்பு மூலமாக பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக நமது அரசு  கல்விக்குழு உள்பட ஐந்து குழுக்களை அமைத்துள்ளது.



 கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த தமிழக அரசு அறிவித்த 5 குழுக்கள் :


1. நியமனக்குழு


2.வளர்ச்சி குழு


3.வேளாண்மை


4. நீர்வள மேலாண்மை குழு


5. பணிகள் குழு


கல்விக் குழு 


ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.



இக்குழுவின் தலைவராக கீழ்க்காணும் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவரை கிராம ஊராட்சி மன்றம் தேர்வு செய்ய வேண்டும். 



உறுப்பினர்கள் 


1. பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி 


2. சுய உதவிக் குழு பிரதிநிதி 


3. அரசு சாரா அமைப்பைச் சார்ந்த பிரதிநிதி 


4. உள்ளூர் தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை 


5. சத்துணவு அமைப்பாளர்


முக்கியமான பணிகள் 


* ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடைய செய்தல்.


* அனைவருக்கும் கல்வி , முறை சாரா கல்வி , நூலக மேம்பாடு , எழுத்தறிவு மற்றும் கிராமப்புற மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கான உத்திகளை வகுத்தல்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post