Title of the document
கொரோனா நோய் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு , 11, 12ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டடுள்ளது. இன்நிலையில், தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருவதில் இடர்பாடு, எதிர்கட்சிகள் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் வழக்கு போன்றவை தொடர்வதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா ? ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பின்பு இன்று மதியம் இது குறித்த அறிவிப்பு வெளியிகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post