சென்னை: கொரோனா
நோய் பரவல் தடுப்பு
பணியில்,
தன்னார்வலர்களாக
செயல்பட, பகுதி நேர
ஆசிரியர்கள் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
இது தொடர்பாக, தமிழ்நாடு
அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர்,
செந்தில்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கொரோனா
நோய் பரவலை தடுக்க, பிரதமரும், முதல்வரும் எடுத்து வரும் நடவடிக்கைகள்
பாராட்டுக்குரியவை. கொரோனா தடுப்புப் பணியில், தன்னார்வலர்களாக பணியாற்ற,
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் விரும்புகிறோம்.
இதை,
பள்ளி கல்வித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடைஉத்தரவு காரணமாக,
பள்ளிகள் நடக்காத சூழலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மார்ச் மாத சம்பளம்
விரைவாக கிடைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஏப்ரல், மே
மாதத்திற்கான ஊதியத்தையும், தடையின்றி வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Post a Comment