Title of the document
கொரோனா பரவலை தடுக்க , மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோயின் தாக்கம் குறித்து அரசு தரப்பில் இருந்து பல்வேறு விழிப்புணர்வும் செய்யபட்டு வருகிறது.
இருந்த போதும் , ஹைதராபாத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் சுதா கார்ஸ் என்ற பெயரில் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். வகை வகையான கார்களை வடிவமைப்பதில் சுதாகர் தனித்துவம் பெற்றவர்.
இதற்கு முன்பாக பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட வடிவங்களில் கார்களை உருவாக்கி அசத்தியவர். இந்த வரிசையில் கொரோனா குறித்தும் புதிய கார் வடிவமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் ஆபத்து குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த கொரோனா காரை வடிவமைத்தேன் என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post