இடி உருளும் சத்தம் கேட்பதற்கு காரணமாவது தொடர் எதிரொலிப் முறைதான். வான் மண்டலத்தில் உருவாகும் காற்றோட்டத்தால் மேகங்கள் ஒன்றை ஒன்று நெருங்கவோ விலகிச் செல்லவோ செய்கின்றன. அப்போது மின்னல் தோன்றிய மேகக் கூட்டத்திலிருந்து எழுப்பும் இடி ஓசை அருகில் நெருங்கும் மேகப் பரப்பில் மோதி எதிரொலிக்கிறது.
இந்த எதிரொலி இடி தோன்றிய மேகத்துக்குச் சென்று பலவீனம் அடைந்து மீண்டும் எதிரொலிப்பதும் உண்டு. இவற்றைத் தொடர் எதிரொலிப்பு என்கிறோம். மேகக் கூட்டங்கள் மிக நெருக்கமாக இருக்கும்போது இந்தத் தொட எதிரொலிப்புகளை பிரித்துக் கேட்க முடிவதில்லை. ஆகையால் இடி உருளுவதைப் போலவும் உறுமுவதைப் போலவும் கேட்கிறோம்
Post a Comment