கல்வி என்பது கற்போர், கற்பிப்போர், சமூகச் சூழ்நிலை இவை மூன்றிற்கும்
இடையே ஏற்படும் செயல்பாடாகும். கற்றல், கற்பித்தல் என்பது ஒரு
ஒருங்கிணைக்கப்பட்ட அற்புதச் செயல்பாடு.
இதில் ஆசிரியர் ஒரு செயல்வீரராகச் செயல்பட்டு மாணவர்களின் மதிப்பைப் பெற
வேண்டும். ஆசிரியர்கள் பணிமனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும்
செயலாற்ற வேண்டும். கற்பித்தலில் உண்மையான ஆர்வம் கொண்டவராக கற்போரின்
மனநிலைக்கு இறங்கி வந்து அவர்களது உணர்வுகளுடன், தம்முடைய உணர்வை இணையச்
செய்து, புகட்ட வேண்டும். அவர்கள் வாழ்வு வளம்பெற நாளும் உதவும்போது அவர்
ஒரு முன்மாதிரி ஆசிரியராகிறார்.
Post a Comment