Title of the document
சென்னை, ஏப்.26- 
 பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2012-13-ம் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 
அந்த பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு நீட்டிப்பு 31-12-2019 உடன் முடிந்தது. 
இதையடுத்து அந்த பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1-1-2020 முதல் 31-12-2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நிதித்துறையின் மறுஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post