சென்னை, ஏப்.26-
பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2012-13-ம் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
அந்த பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,
வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கு 9 முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த
பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு நீட்டிப்பு 31-12-2019 உடன்
முடிந்தது.
இதையடுத்து அந்த பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி, 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1-1-2020 முதல்
31-12-2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர்
நீட்டிப்பு குறித்த நிதித்துறையின் மறுஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில்
எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Post a Comment