Title of the document
தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாாபில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது
கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில் இளைநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே குரூப் 2 தேர்வு எழுத முடிவும் என அறிவிக்கப்பட்டு இருந்தது
இதையடுத்து, இளங்கலை பட்டயப்படிப்பு படிக்கும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள், தாங்களும் குரூப் -2 தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சியும் வரும் 23 தேதிக்குள் பதிலளிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post