Title of the document


சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு ஆங்கில பாட வினாத்தாளில் கடந்த ஆண்டு வரை இடம்பெற்ற 40 கேள்விகள்35 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு வினாத்தாள், தேர்வுக்கான மதிப்பெண், விடைத்தாள் திருத்தும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்தால் அவற்றை சி.பி.எஸ்.இ. முன்கூட்டியே அறிவிக்கும்.
அதன்படி இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு வரை 40 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இனி 35 கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வகைகளாக கேள்விகள் இடம் பெற உள்ளன. முதல் வகையில் சரியான விடையை தேர்வு செய்து எழுதும் தலா ஒரு மதிப்பெண்ணுக்கான 5 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. மிகக் குறுகிய விடை அளிக்கும் வகையில் 9 கேள்விகளும், இவற்றுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, குறுகிய விடையளிக்கும் வகையில் 3 கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றின் விடைகளுக்கு தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 5 மதிப்பெண்கள் கொண்ட விரிவான விடையளிக்கும் 2 கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட மாதிரி வினாத்தாள் சி.பி.எஸ்.இ.-யின் http://cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post