Title of the document

இந்திய இளைஞர்களின் வளர்ச்சியும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிலரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூக அறிவியல் துறை ஏற்பாடு செய்திருந்த இப்பயிலரங்கில் இளைஞர்களின் கல்விச் சாதனைகள், இளைஞர்களும் சமூக ஊடகங்களும் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டன. பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சம்பத்குமார், உளவியல் துறைப் பேராசிரியர் ஜொனார்துல்லா உள்ளிட்டோர் இப்பயிலரங்கில் உரையாற்றினர். இதில் சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சி. வெங்கடாசலம், பி.சேதுராஜ்குமார், ஜெயசீலன், சி.கோபாலகிருஷ்ணன், டி.சுந்தர் ராஜன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post