Title of the document


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தருமபுரி மாவட்டத்தில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தமிழ் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் வரும் நவ. 2-ஆம் தேதி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.
ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றிதழுடன் பங்கேற்கலாம். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அன்று மாலையிலேயே போட்டி முடிவுகளும் அறிவிக்கப்படும். முதல் பரிசு பெறுவோர் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.

போட்டிகளுக்கான தலைப்பு போட்டி நாளன்று அறிவிக்கப்படும். ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் பள்ளியில் இருந்து கடிதம் வாங்கி வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post