Title of the document

Today School Morning Prayer Activity - 03.11.2022  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2022 



திருக்குறள் :
பால்: அறத்துப்பால்,


அதிகாரம் - அறன் வலியுறுத்தல்.


குறள் ;


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு


பொருள் :
ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம் - அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

பழமொழி :

Appearance are always deceptive.

தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதே.



இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன்.

பொன்மொழி :

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே



பொது அறிவு :

1. மரகத தீவு என்று அழைக்கப்படுவது எது?

அயர்லாந்து.

2. அரபியக் கடலின் அரசி என்று அழைக்கப்படுவது எது?

இந்தியாவில் உள்ள கொச்சி நகரம்.

English words & meanings :
Qui-no-lo-gy - study of the medicine quinine. Noun. குயினைன் என்று சொல்ல கூடிய மருந்து பற்றிய படிப்பு

ஆரோக்ய வாழ்வு :
தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

NMMS Q :
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை_________


விடை: எரியும்


நவம்பர் 3


அமர்த்தியா சென் அவர்களின் பிறந்தநாள்




அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்

நீதிக்கதை
நரியின் தந்திரம்


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது.


சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.


சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது.


நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது.


நீதி :
நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.



இன்றைய செய்திகள் - 03.11.22

* வடகிழக்குப் பருவமழை | தமிழகம் முழுவதும் 5093 நிவாரண முகாம்கள் தயார்: பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தகவல்.


* ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு புதிய சட்டம் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு.


* தமிழகத்தில் நிர்வாகத்துறை நடுவர்களுக்கு குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


* மோர்பி பாலத்தின் கேபிள் சீரமைக்கப்படவில்லை: நீதிமன்றத்தில் அரசு தரப்பு அதிர்ச்சித் தகவல்.


* நேற்று ஒரே நாளில் 10 ஏவுகணை சோதனை: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு.


* நீல திமிங்கலங்கள் வருடத்திற்கு 10 மில்லியன் துண்டுகள் நுண் ஞெகிழி கழிவுகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* டி20 உலகக் கோப்பை: வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்.


* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா, சக்காரி வெற்றி.


* ஐ-லீக் கால்பந்தின் 2022-2023 சீசன் நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Today's Headlines


* North East Monsoon | 5093 relief camps are ready across Tamil Nadu: Disaster Management Minister informs.


* Fixation of compensation for already acquired lands under new law: High Court orders.


* The High Court ordered the Tamil Nadu government to provide training to administrative judges of Tamil Nadu on criminal laws.


* Tamil Nadu is likely to receive heavy rain for the next 5 days, according to the Chennai Meteorological Department.


* The central government has decided to grant citizenship to minorities who came from Pakistan, Bangladesh and Afghanistan.


* Cable of Morbi Bridge is not repaired : Shocking statement by the government in court.

*10 missile are tested in a single day yesterday: South Korea accuses North Korea.


* Blue whales ingest 10 million pieces of plastic waste per year, according to a report released by scientists.


* T20 World Cup: India beat Bangladesh by thrilling victory - ranks top in the statistics


* Women's Tennis Championship: Sabalenka, Sakari won.


* The All India Football Federation has announced that the 2022-2023 season of I-League Football will begin on November 12.


Prepared by


Covai women ICT_போதிமரம்,பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்,SCHOOL MORNING PRAYER ACTIVITIES,

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post