Title of the document
வினாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 89 மாணவர்களை துபாய் நகரத்திற்கு சுற்றுலாப் பயணம் அனுப்பி வைத்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


18.09.2021 முதல் 08.11.2021 வரை , இணைய வழியில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில் சிறந்து விளங்கிய , தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் 89 மாணவர்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . மேலும் , தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் , ஐக்கிய அரபு அமீரக ( United Arab Emirates ) நாட்டிலுள்ள , துபாய் ( Dubai ) நகரத்திற்கு , வருகிற 2021 , டிசம்பர் மாதம் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது . மேலும் , மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே , இணைப்பிலுள்ள , தெரிவு செய்யப்பட்ட தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த , சுற்றுலா செல்ல விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோரிடமிருந்து , துபாய் நகரத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல இசைவு தெரிவித்து ஒப்புதல் பெற்ற விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலை 3 19.11.25 ^ ( 19.11,202J மணிக்குள் இவ்வலுவலக " எம் பிரிவு " மின்னஞ்சல் முகவரிக்கு ( msectndse@gmail.com ) அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட மேலும் , விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அவர்தம் அருகாமையிலுள்ள மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்திற்குச் ( Regional Passport Office ) சென்று விண்ணப்பித்து , கடவுச் சீட்டு பெறுவது சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியம் என்பதால் , உரிய தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இணைப்பு :

1. தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரம் ( மாவட்ட வாரியாக )

2. பெற்றோரின் ஒப்புதல் மாதிரி படிவம்

DSE - Dubai Tour Proceedings - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post