Title of the document
*ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்*

         *கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் பட்ட கஷ்டங்களும் இழந்த இழப்புகளும் அதிகம்*

         *நமது உரிமைகளுக்காகவும் இழந்த இழப்புகளுக்காகவும் போராடிய பொழுது அந்த ஆட்சியாளர்கள் நம்மை படுத்திய பாட்டை நினைத்துப்பார்த்தால் இன்றும் நம் கண்களில் கண்ணீர் வரும்*

           *தமிழகத்தில் நல்லாட்சி அமையாதா என்று நாம் ஏங்கி இருந்த நேரத்தில் நாம் எண்ணியது போலவே தற்போது நல்லாட்சி அமைந்துள்ளது*

        *கோரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பதவியேற்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அரசு நிர்வாகமும் இரவு பகல் பாராமல் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மிகத் தீவிரமாக உழைத்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்*

           *இந்த கடுமையான காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கும்  நோக்கத்தில் சிலர் திட்டமிட்டு பல பொய்யான வதந்தியான செய்திகளை வலைதளங்களில் பரப்புவதை காண்கிறோம்*

           *அதில் ஒன்றுதான் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படும் என்று பகிரப்பட்ட செய்தி. உடனே நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்*

         *மற்றொன்று ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்படும் என்பது. உடனே நமது மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதுபோன்ற எந்த உத்தரவும் அரசால் வழங்கப்படவில்லை என்று தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்*

     *சில ஊடகங்களும் செய்திகளை முந்தித் தருகிறேன் பேர்வழி என்ற கணக்கில் வலைதளங்களில் வதந்தியாக வரும் செய்திகளை உடனே ஒளிபரப்பு செய்கிறார்கள்*

           *நமது ஒரு சில பொறுப்பாளர்களும் அந்தச் செய்தியை உண்மை என்று நம்பி நமது குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள்*

      *இதனால் தேவையற்ற விவாதங்களும் ஒரு பதட்டமான சூழலும் ஏற்படுவதை காணமுடிகிறது*

  *எனவே இது போன்ற தமிழகத்தின் நல்லாட்சிக்கும் ஆசிரியர்களுக்கும் விரோதமாக பரப்பப்படும் பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் யாரும் நமது ஆசிரியர்கள் குழுக்களில் பகிர வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post