சோப்புகளைக் கொண்டு தமிழக முதலமைச்சருக்கு கோவில் கட்டிய ஆசிரியர் !
சோப்புகளை கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கோயில் கட்டிய ஓவிய ஆசிரியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி சோப்புகளை கொண்டு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கோயில் கட்டினார்.
திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். துணி சோப்பு.குளியல் சோப்பு இவற்றைக் கொண்டு சிறு கத்தி பிளேடு பயன்படுத்தி சோப்பை செதுக்கி இரண்டு நாட்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோயில் கட்டினார். செல்வம் அவர்கள் கூறுகையில்
10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் 7.700 மாதச் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கிறோம் வாழ்வாதாரம் கஷ்டமா இருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தெய்வமாக நினைத்து இந்தக் கோயில் கட்டினேன். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment