கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி , முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTeEZxOmN9lzSvDug4uhv81bU2nmXwQh43uXzubqnFLpjB5v7tXFQU27iCgJY44ncb9ZNnY50QF_V7zhPQJyu06zs_ECMG04SznaZdbru-l-VvZnmfWL4PVyc6gR-IScNZTaX_xeKugcA/w443-h607/IMG_20201231_165539.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyQQRRzmQqhk7r5eNuXmBp9SmmY2qHThEXlZGepDN1VqAHaCw4ltvXqAA_lUOTJiB8WII__e35x7jG17zIz-zHnehh-tSnPhueR-a3_u6vj6N5Qh58YSFS7EhkRE9wcT1TuEVx_R8oeE0/w461-h603/IMG_20201231_165548.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-5bvBJZVjCaBCa2pYb-22GIxFuwMxYzvBRi7ZXe-0sMelPmMuj9kvbQ39oQWMIuSiyO_Sy_e84mH-AmMMTmC-ny_qnLsRfH5QBrOCC97xHeVU9blnN1jzHZ2qzyvJrSD8DPdej4d84gM/w482-h639/IMG_20201231_165602.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpeTJEXKv6T_uAQrzM_gMfx0eKFkzfrOdIITGE4f4sz2GKX3PxXPxyW3wsVf2f4JLMOH4Z8yH61ccYAJTJfHbpRadTNKp7TBIruEWwrIuEhUhXumF_smb5zwyEt4mYZY1ZnQ8WqLx5OL8/w517-h540/IMG_20201231_165616.jpg)
தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் , மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து , நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் , நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது . கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment