Title of the document

CA படிப்புக்கு ஆன்லைன் பயிற்சி  பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு

 

 


 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

 சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவு, ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்பும் அரசு பள்ளி மாணவ -மாணவியர், பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவில் சேர, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக, ஆன்லைன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. டிச., 23 ல் துவங்கி, தினமும் காலை, 6:30 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை, 5:30 மணியிலிருந்து, 8:30 மணி வரையும் பயிற்சி வழங்கப்படுகிறது. தினமும் ஐந்து மணி நேரம் வீதம், ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. 


இதற்கு கட்டணமாக, 9,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்பும், மாணவர்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதற்கான அறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை, அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளைதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர்பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post