Title of the document

 பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை


மதுரை , முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 
இது குறித்து நமது கல்வி நியூஸ் வலைதளத்திற்கு கிடைத்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . தற்போது கோவிட் 19 காரணமாக பள்ளிகள் அரசின் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு மாணவர்களை பள்ளிக்கு வருகை புரிய செய்யக்கூடாது என பலமுறை அறிவுரை வழங்கியும் சில பள்ளிகளில் மாணவர்களை வருகை புரிவதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது . எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர் பருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது . இதுபோன்ற புகார்கள் பெறப்படின் பள்ளத் தலைமையாசாயா மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர் ,
மதுரை ,
 பெறுநர்
தலைமையாசிரியர்கள் ,
முதல்வர்கள் அனைத்து வகைப்பள்ளிகள் மதுரை மாவட்டம் ,

நகல்
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் ,
மதுரை மாவட்டம் ,
 ( உரிய நடவடிக்கைகாக அனுப்பப்படுகிறது )


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post