ஆசிரியர் கலந்தாய்வு ரத்து - புரோக்கர்கள் மூலம் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள்!
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் கலந்தாய்வு ரத்து புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள் உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சி (பத்திரிகை செய்தி.)
கொரோனாவால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் , புரோக்கர்கள் உதவியுடன் வெளி மாவட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால் , உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவியதை தொடர்ந்து , கடந்த மார்ச் முதல் 9 மாதமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் , இந்தாண்டு பள்ளி கல்வித்துறையில் வழக்க மாக ஜூன் மாதம் நடை பெறும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வும் நடத்தப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது . இதை பயன்படுத்தி , விரும்பிய பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று கொடுக்க , நாமக்கல்லில் உள்ள கல்வித் துறை புரோக்கர்கள் வரிந்து கட்டிகொண்டு களம் இறங்கியுள்ளனர் . வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் , நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் கல்வித்துறை புரோக்கர்கள் மூலம் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுவருகிறார்கள்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
Post a Comment