அரசுபள்ளிகள் வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டது போல் சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது ...இது பொய்யான செய்தி என தமிழகஅரசு தெரிவித்துள்ளது..
சமூக வலைதளங்களில் பலரும் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்காயம் அணிய வேண்டும்
திரையரங்குகள் அக்டோபர் 1ம் தேதி திறக்கப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் இருக்கைகளும் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும் தமிழகம் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பும் K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்'
என்று தமிழக அரசு அறிக்கை போன்ற ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
* தமிழகத்தில் செப்.14ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது
* அக்.1ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவலும் உண்மையல்ல என்று
தமிழக அரசு இது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை அறிவிக்கவில்லை.
Post a Comment