Title of the document
Kalvi News - 10th Standard Mark Sheet - நாளை முதல் பள்ளிகளில் வழங்கப்படும் 

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் (ஆக.17) விநியோகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக் கொள்ள வேண் டும்.

இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை நாளை (ஆக.17) முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின்தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post