Title of the document
சுதந்திர தின நிகழ்ச்சிகள் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை..

சுதந்திர தினத்தை ஒட்டி, கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாண வர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் கடிதம் எழு தியுள்ளார். அதன் விவரம்:


நாட்டின் சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த விழாவில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு தனது கடிதத்தின் வாயிலாகத் தெரிவித் துள்ளது


எனவே, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை போன்ற நிகழ்வுகளை மாவட்டங்களில் நடத்துவது சிரமமான காரியமாகும். இதைக் கருத்தில் கொண்டு காவல் துறையினர் மரியாதையை மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிகழ்வை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின் றனர் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post