Title of the document




 15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு !!

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க சுதந்திர தினவிழா 2020 , 15.08.2020 ( சனிக்கிழமை ) அன்று இந்திய திருநாட்டின் 74 - வது சுதந்திர தினவிழாவினை மிகவும் சிறப்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் , வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் :

* மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்கள் / அனைத்து வகை பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவினை சமூக இடைவெளியினை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

* அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.

* கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

* கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம்.

* சுதந்திர தினவிழாவின் போது கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும்.



* கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் -19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினவிழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு மாவட்டக் | வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post