Title of the document
 RTI - திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 விரைவு அஞ்சல் AHA இப தலைமைச் செயலகம் , சென்னை -9 . தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு கடிதம் எ .11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 அனுப்புநர் திருமதி . பா . சித்ரா , பி . ஏ . பொது தகவல் அலுவலர் அரசு சார்புச் செயலாளர் , பெறுநர் செல்வி.க.சத்யப்பிரியா , த.பெ.காளைலிங்கம் , காடனேரி கிராமம் , பாகனேரி அஞ்சல் , சிவகங்கை மாவட்டம் . ( இ ) அம்மையீர் , பொருள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005- தகவல் கோரியது தொடர்பாக , பார்வை : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனு நாள் 11.06.2019 . ( இத்துறையில் கிடைக்கப்பெற்ற நாள் 13.06.2019 . பார்வையில் கண்ட தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது 

திருமணமாகாத ஒரு அரசு வாழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை ( நிலை ) எண் .134 , தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை , நாள் 22.10.1998 - ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 

அதன் நகல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . 

தங்கள் உண்மையுள்ள ,

 பொதுத் தகவல் அலுவலர் | அரசு சார்புச் செயலாளர் . G
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post