எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு
உள்மதிப்பீடு அடிப்படையில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு
பதிவாளர் என்.சேதுராமன் அறிவிப்பு
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்மதிப்பீடு அடிப்படையில் இறுதி
செமஸ்டர் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பதிவாளர் என்.சேதுராமன்
தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் மாதம்
முதல் விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன. செமஸ்டர் தேர்வுகள் எப்படி
நடத்தப்படும்? தேர்வு முடிவு எப்படி வெளியிடப்படும் என்பது குறித்து
மாணவர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்.சேதுராமன்
‘தினத்தந்தி‘ நிருபரிடம் கூறியதாவது:-
இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு
கொரோனா நோய்த்தொற்றின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இறுதி
செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற
உள்மதிப்பீடு அடிப்படையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிட
திட்டமிடப்பட்டு இருக்கிறது.
Post a Comment