Title of the document
பொறியியல் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி : "5 பாடங்களில் ஒரு பாடத்திற்கு விலக்கு" - அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.

கொரோனா ஊரடங்கால் பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள் முழுமையாக முடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தள்ளி வைக்கப்பட்ட செமஸ்டர்  தேர்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், 5 பாடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட 4 பாடங்களில் இருந்து கேள்வி கேட்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்திருப்பதாகவும், மேற்கண்ட நடைமுறைகள், அரியர்ஸ் வைத்துள்ளவர்களுகு பொருந்தாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த முடிவால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post