Title of the document
4 மாவட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 இன்று முதல் வழங்கப்படும் !! 

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 இன்று முதல் வழங்கப்படுகிறது. அட்டை தாரர்கள் வீடுகளுக்கு சென்று ரூ.1000 த்தை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குகின்றனர். இன்று முதல் 26-ம் தேதி வரை 21.83 லட்சம் பயனர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரும் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு ரூ.1000 த்தை வழங்குகின்றனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைநகரில் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவினை கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்று முதல் தமிழக அரசின் ரூ. 1000 நிவாரண உதவியை பெறலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post