Title of the document
கொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச் மாதம் 16 ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருப்பினும் , நாட்டில் கொரோனா தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது . இதனிடையே , மாநிலங்கள்  , யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி , கல்லூ ரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச்செயலாளர்களுக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திலையில் , 20 லட்சம் பெற்றோர் கையெழுத் திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: பள்ளி , கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக் கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் . இது பெற்றோர்கள் தீயே கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண் டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது.

கல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில் , ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post