Title of the document
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 15 வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சி.பி.எஸ்.இ., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post