
அவசர கடன் வழங்குவதாக, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட தகவல்:'யோனோ' செயலி வாயிலாக, அவசர கடன் வழங்குவதாக, சமூக வலைதளங்களில், வதந்திகள் உலா வருகின்றன.
அதுபோன்ற, எந்த ஒரு கடன்களும் தற்போது வழங்கப்படவில்லை. இந்த வதந்திகளை, வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம்.
Post a Comment