Title of the document
பள்ளிக் கல்வி முதன்மைச் செய லர் தீரஜ் குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத் துடன் இணைந்து பணியாற்ற பல்வேறு ஆசிரியர்கள் விருப் பம் தெரிவித்துள்ளதுடன், அதற் கான வழிகாட்டுதல்களை வெளி யிடவும் கோரிக்கை விடுத்துள் ளனர். 
இதையடுத்து தற்போ தைய ஊரடங்கு சூழலில், தன் னார்வ சேவை புரியத் தயாராக உள்ள 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கரோனா தடுப்புப் பணியில் பயன்படுத்திக் கொள்ளலாம். 
அதன்படி, ரேஷன் பொருட் கள் விநியோகத்தை ஒழுங்குபடுத் துதல், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கண்காணித் தல், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்குதல், பொது கணக்கெடுப்பு உட்பட மருத்துவம் சாராத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தலாம். 
விருப்பம் தெரிவிக்கும் ஆசிரி யர்கள் பட்டியலைத் தயாரித்து மாவட்ட ஆட்சியர்களிடம், அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post