Title of the document
IMG-20200516-WA0023

கோயம்புத்தூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்டத் திட்ட அலுவலகமானது 18.05.2020 முதல் 50 விழுக்காடு பணியாளர்களுடன் பணியாற்றவேண்டும் என்ற அடிப்படையில் முதல் இரு நாட்கள் 50 % பணியாளர்களும் , அடுத்த இரு நாட்களில் மீதமுள்ள 50 % பணியாளர்களும் பணியாற்றிய பின்னர் இதே தொடர் சுழற்சி அடிப்படையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது மேலும் இணைப்பில் கண்ட அரசாணையைப் பின்பற்றி 18.05.2020 முதல் அனைத்து வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ( பொறுப்பு ) , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , அனைத்து கணக்காளர்கள் , பொறியாளர்கள் , சிறப்பாசிரியர்கள் , இயன்முறை மருத்துவர்கள் , கணினி விவர பதிவாளர்கள் மேற்குறிப்பிட்ட சுழற்சி முறையில் 50 % பணியாளர்களுடன் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நாட்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 18.05.2020 மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post