Title of the document
1589018761832

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2.05.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும் , மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும் , பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு முழுவதும் ( நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர ) கீழ்க்காணும் பணிகள் , 11.05.2020 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

• அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் , மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் . பிற தனிக்கடைகள் ( All Standalone and Neighbourhood shops ) காலை 10 . 30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் .

• அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் , மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் , காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் . பிற தனிக்கடைகள் ( All Standalone and Neighbourhood shops ) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் .

• சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ( நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர ) தேனீர் கடைகள் ( Tea Shops ) பார்சல் சேவைக்கு மட்டும் , காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது . தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும் . மேலும் , தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து , கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் . கடையில் , வாடிக்கையாளர்கள் நின்றோ , அமர்ந்தோ , ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை . இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும் .

• பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் . பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் , காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் . தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும் .

• பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 . 30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் . பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் , அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் . அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும் , போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும் , பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும் , அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( Standard Operation Procedures ) தீவிரமாக கடைபிடிப்பதையும் , கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் , மாநகராட்சி ஆணையாளர்களும் , காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் , தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் . கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் , தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும் , ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post