Title of the document
வீட்டிலிருந்து பணிபுரிவோர் கவனத்துக்கு.. இணையம் வழியாக கணினிகள் ஹேக் செய்யப்படலாம் மத்திய சைபர் பிரிவு எச்சரிக்கை 
 வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களின் கணினிகள், இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

இதனால், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்து வேலைபார்க்கும்படி கூறி அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. 
அதற்காக லேப்டாப், கணினி உள்ளிட்ட சாதனங்களை நிறுவனங்கள் வழங்கின. தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்கள் இணைய சேவையை அதிகம் பயன்படுத்து கிறார்கள். இதனால், இணையம் மூலம் கணினியில் உள்ள தக வல் திருடப்பட வாய்ப்பு உள்ள தாக மத்திய உள்துறை அமைச் சகத்தின்கீழ் செயல்படும் சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
  இதுதொடர்பாக மத்திய சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கை:
பணியாளர்கள் தங்களின் அலு வலங்களில் இணைய சேவையை பயன்படுத்துவதற்கும் வீட்டில் இருந்து பயன்படுத்துவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அலுவலகங்களில் இணைய சேவைக்கான பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், வீட்டில் பயன்படுத்தும் போது சுய பாதுகாப்பு ஏற்பாடு களை நாமே செய்யவேண்டும். 
பொது இணையசேவை மூலம் உங்களது கணினி ஹேக் செய் யப்பட்டு, தகவல் திருடப்படலாம். எனவே பொது இலவச வைஃபை சேவையை பயன் படுத்தவேண்டாம். கணினி மற்றும் லேப்டாப்பில் ஆன்டி வைரஸ் மென்பொருள் முறையாக செயல்படுகிறதா என்று அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். 
(SOURCE THE HINDU TAMIL THISAAI 13/04/2020)

தேவையில்லாத செய லிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அலுவலக வேலை களை செய்யும் சாதனங்களில்z சமூக வலைதளத்தைப் பயன் படுத்த வேண்டாம். கடவுச் சொல்லை பலமாக கட்டமைக்க வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post