Title of the document
கொரோனா தடுப்பு பணியில் பாதிப்படைந்தால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹2 லட்சம் - மருத்துவமனையில் இலவச சிகிச்சை தமிழக அரசு அறிவிப்பு.

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அரசாணை : அத்தியாவசியமான துறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்

மேலும் அவர்களுக்கு கருணைத்தொகையாக ₹2 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது . இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிவதால் , யாரேனும் இந் நோய் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத் துவமனையில் சிகிச்சை பெறவும் , கருணைத் தொகையாக ₹2 லட்சம் வழங்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு . வரதராஜன் கூறுகையில் , " கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது . தற்போது அரசு அறி வித்த இந்த அறிவிப்பை வரவேற்கிறோம் .

அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் , தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஒரு மாதம் ஊக்கத் தொகை வழங்கியுள்ளது . அதே போல கொரோனாவை தடுக்கும் வகையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஒரு மாதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் " என்றார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post