Title of the document
கரோனா பரவலின் தீவிரத்தைப் பொறுத்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  கரோனா வைரஸ் பரவல் காரண மாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் இறுதியில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கி டையே, கரோனா பாதிப்பு தீவிர மடைந்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப் படுமா அல்லது ரத்து செய்யப் படுமா என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது. 


  இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே அவர்களின் அடுத்தக்கட்ட உயர்நிலை படிப்பு களை தேர்வு செய்ய வழிவகுக்கும். மேலும், டிப்ளமோ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மிக அவசிய மானது. எனவே, மற்ற வகுப்பு களைப் போல முந்தைய தேர்வு களின் அடிப்படையில் மாண வர்களை தேர்ச்சி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். 

கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மே அல்லது ஜூனில் தேர்வுகள் நடத் தப்படும். அதன்பின்னும் தாக்கம் நீடித்தால் சிபிஎஸ்இ போல கணி தம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம். 


  எனினும், இந்த விவகாரத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி சூழலின் தீவிரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். எனவே, மாணவர்கள் குழப்பமடையாமல் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்” என்றனர்.


SOURCE : THE HINDU TAMIL THISAI



பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மே இறுதியில் நடத்த கல்வித்துறை ஆலோசனை

SOURCE DINAMANI

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாத இறுதியில் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

  தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தோ்வைத் தவிர அத்தனை தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.


  இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள், கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

  மேலும், கரோனா பரவலைத் தடுக்க மே 15 வரை பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதால் பத்தாம் வகுப்பில் பள்ளித் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

  அதேவேளையில் பள்ளித் தோ்வுகளில் அந்தந்தப் பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு அதன் அடிப்படையில் தோ்வை முடிவு செய்வது சரியல்ல என பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கூறுகையில், பொதுத்தோ்வு குறித்து முதல்வா் முடிவு செய்வாா் என புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தாா்.


  மேல்நிலைக் கல்வி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் சோ்க்கை, போட்டித் தோ்வுகள், அரசுப் பணி என பலவற்றிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் முக்கியத்துவம் பெறுவதால் அந்தத் தோ்வை நிகழாண்டு ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் கரோனா தொற்று முடிவுக்கு வரும் பட்சத்தில் கோடை விடுமுறையில் அதாவது மே மாதம் பொதுத்தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மே மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்தப்பட்டால் அது குறித்த அட்டவணை பத்து நாள்களுக்கு முன்பாக வெளியிடப்படலாம். இது குறித்த இறுதி முடிவை முதல்வா் எடுப்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.








# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post