Title of the document
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ , மாணவிகள் தெரிவித் தனர் . இதன் காரணமாக , சென்டம் எடுப்போரின் எண்ணிக்கை குறையக் கூடும் . பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 - ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

நேற்று இயற்பியல் , பொருளாதாரம் , கம்ப் யூட்டர் சயின்ஸ் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன . இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும் போது , " ஒரு மதிப்பெண்வினாக்கள் சற்று கடின மாக இருந்தன . அனைத்துப்பாடத் தையும் நன்கு படித்திருந்தால் மட்டுமே ஒருமதிப்பெண்பகுதியில் அனைத்து வினாக்களுக்கும் சரி யாக விடையளிக்க முடியும் . பாடத் தின் உள்ளே இருந்து கேட்கப்பட் டிருந்தாலும் அவை மறைமுகமாக இருந்தன .

நன்கு புரிந்து படித்த மாணவர்களால்தான் விடையளிக்க முடியும் . பெரிய வினாக்கள் பகுதியில் நேரடியான வினாக் களும் , மறைமுகமான வினாக்களும் கலந்து இடம்பெற்றிருந்தன என்று தெரிவித்தனர் .

 ஒரு மதிப்பெண் பகுதியில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட் டிருப்பதால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம் .

ஏற்கெனவே நடந்து முடிந்த கணிதத் தேர்வும் கடின மாக இருந்ததாகவே பெரும் பாலான மாணவ , மாணவிகள் தெரிவித்திருந்தனர் . பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கணிதம் , இயற்பியல் , வேதியியல் ஆகிய மூன்று பாடங்களின் மதிப்பெண் கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன .

அந்தவகையில் கணிதமும் , இயற்பியலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருது வதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post