Title of the document
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு
அலுவலரின் செயல்முறைகளின் படி ஆரணி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2019 - 2020 ஆம் நிதியாண்டில்
பல்வேறு இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டுள்ளது . இந்நிதி
ஒதுக்கீட்டில் இருந்து 2202 - 02 - 109AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் அரசு
உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் மாசற்ற சிறப்பக பணியாற்றிய
ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு பரிசுகளும் வெகுமதியும் என்ற
நுண் கனக்குத்தலைப்பில் சிறப்பு வெகுமதித் தொகை ரூ . 2000 / - வழங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
எனவே தங்கள் பள்ளியில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும்
அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி
செய்து தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் 21 . 02 . 2020 அன்று மாலை 5
. 00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment