Title of the document
 

தமிழகத்தில், தொடர்ந்து, 13 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு, டிசம்பர், 23ல் முடிந்தது; மறுநாள் முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜனவரி, 2ல், பள்ளிகள் திறக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின், உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஜனவரி, 3க்கு பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், ஓட்டு எண்ணிக்கை முடிய கூடுதல் நாட்களாகும் என, தேர்தல் ஆணையம் கூறியதால், பள்ளிகள் திறப்பு, ஜனவரி, 4க்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், ஜனவரி, 4லிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்தல் பணி மற்றும் ஓட்டு எண்ணிக்கை பணிகளை பார்த்ததால், அவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், ஜனவரி, 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 13 நாட்கள் விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் நலன் கருதி முன் கூட்டியே பள்ளிகளைதிறந்து, பாடங்களை நடத்த துவங்கி விட்டன. இன்று முதல் மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளிலேயே, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post