இன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி !!
உறுதிமொழி 
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் 
குடிமகன் / குடிமகள் ஆகிய நான் , நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை 
ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் . தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு , 
எவர்மீதும் தெரிந்தோ , தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் , வாக்கு , செயல் 
என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார 
உறுதியளிக்கிறேன் . அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க , சமய 
வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் , 
உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் . இந்திய 
அரசியலமைப்பின்பால் - எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் 
எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் .
 
 
 
  
Post a Comment